சேகர் அந்த தி.நகரில் இருக்கும் ஜவுளி கடைக்கு வேலை கேட்டுச்சென்றான். கடை முதலாளியோ வேலை எதுவும் இப்போது காலி இல்லை என்று சொல்லிவிட்டார். சேகர் விடுவதாய் இல்லை, கடைக்கு முன் நின்று
"நல்ல தரமான துணிகள் இங்கு கிடைக்குமம்மா"
"ஒரு தரம் வந்து பாருங்கள்"
என்று தெருவில் வருவோர் போவோரிடம் சொல்ல ஆரம்பித்தான். கடை முதலாளி அவனை பார்த்தார். அந்த பார்வையே சொல்லியது அவனுக்கு வேலை கிடைத்துவிட்டது என்று.
4 months ago
No comments:
Post a Comment